நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகிய வைத்தீஸ்வரன் கோயிலில் "செவ்வாய்" என்ற பெயரில் அறியப்படும் அங்காரக பெருமாள் பக்தர்களுக்கு தோஷ விமோசனம் அருளுகிறார். குஷ்ட நோயினால் அவதிப்பட்ட அங்காரகருக்கு சிவபெருமான் வைத்தியராக வந்து நோய் நீக்கிய திருக்கோயில் என்பதால் இக்கோயிலை வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கின்றனர்.
அங்காரக பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-
நிறம்: சிவப்புதானியம்: துவரை
வாகனம்: ஆடு
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
கிழமை: செவ்வாய்
இரத்தினம்: பவழம்
பலன்கள்: பகைவர்களை ஜெயித்தல், சகல சாஸ்திரம், ஞானம்
நாடி ஜோதிடர்கள் மிக அதிகமாக காணப்படும் இந்த ஊரில் சமீப காலத்தில் ஓரிரு நல்ல உணவு விடுதிகளும் உள்ளன என்பதை இம்முறை நேரில் கண்டறிந்தோம். சிதம்பரத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஊர் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
இக்கோயிலிலுள்ள சித்தாமிருதம் என்ற கோயில் குளத்தில் மூழ்கியவர்களுக்கு நோய் நொடிகள் யாவும் கரைந்து போகும் என நம்பப்படுகிறது.
"திருபுள்ளிருக்கு வேலூர்" (புள், இருக்கு, வேல் ஆகியவையுடன் கூடிய ஊர்)என்ற திருநாமத்தில் அறியப்படும் இந்த கோயில், ஸ்தல விருட்ஷமாக வேப்ப மரத்தையே கொண்டுள்ளது. கோயிலில் நடராஜர், துர்கா, சிவகாமி, சூரிய பகவான், சப்த கன்னிகைகள், 63 நாயன்மார்கள் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை செல்வமுத்துக் குமாரனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இராமாயணத்தில் வரும் ஜடாயுவின் விருப்பப்படி ஸ்ரீ ராமர் ஜடாயுவுக்கு இறுதி சடங்குகளை இந்த இடத்தில் செய்ததாக கருதப்படுகிறது. ஜடாயு குண்டம் என அறியப்படும் இவ்விடத்தையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
அங்காரக கவசம் எனும் மந்திரம்:-
அஸ்ய ஸ்ரீ அங்காரக கவச ஸ்தோத்ரமந்த்ரஸ்ய
கச்யபருஷிஃ
அனுஷ்டுப் சந்தஃ
அங்காரகோ தேவதா
பௌமப்ரீத்யர்த்தம் ஜபே விநியோகஃ
ரக்தாம்பரோ ரக்தவபுஃ கிரீடீ
சதுர்புஜோ மேஷகமோ கதாம்ருத்
தராசுதஃ சக்திதரஸ்ச சூலீ
ஸதா மம ச்யாத்வரதஃ பிரசாந்தஃ
அங்காரகஃ சிரோ ரக்ஷேன்முகம் வை தரணீசுதஃ
ஸ்ரவௌ ரக்தாம்பர பாது நேத்ரே மே ரக்தலோச்சனஃ
நாஸாம் சக்திதரஃ பாது முகம் மே ரக்தலோச்சனஃ
புஜௌ மே ரக்தமாலீ ச ஹஸ்தௌ சக்திதரஸ்ததா
வக்ஷஃ பாது வராங்கஸ்ச ஹ்ருதயம் பாது ரோஹிதஃ
கடிம் மே க்ரஹராஜஸ்ச முகம் சைவ தராசுதஃ
ஜானுஜங்கே குஜஃ பாது பாதௌ பக்தப்ரியஃ சதா
ஸர்வான்யாந்யானி சாங்கானி ரக்ஷேன்மே மேஷவாஹனஃ
ய இதம் கவசம் திவ்யம் சர்வசத்ருநிவாரணம்
பூதப்ரேதபிசாசானாம் நாசனம் சர்வஸித்விதம்
சர்வரோகஹரம் சைவ சர்வசம்பத்ப்ரதம் சுபம்
புக்திமுக்திப்ரணம் ந்ரூணம் சர்வசௌபாக்யவர்த்தனம்
ரோகபந்தவிமோக்ஷம் ச ஸத்யமேதன்ன ஸம்சயஃ
இதி ஸ்ரீ மார்கண்டேய புராணே மங்கலகவசம் சம்பூர்ணம்
மிகவும் அருமை
ReplyDelete