Wednesday, August 12, 2009

திருதேவனார்தொகை

வைத்தீஸ்வரன் கோயிலில் மதிய உணவை முடித்துக் கொண்டு நேராக வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரு தேவனார் தொகை என்ற கோயிலுக்கு சென்றோம்.

மூலவர் தெய்வநாயகன், உற்சவர் மாதவப் பெருமாள் ஆகிய நாமங்களில் பெருமாளும் கடல்மகள் நாச்சியார் என்ற பெயரில் தாயாரும் (உற்சவ வடிவில் மாதவ நாயகி என அழைக்கப்படுகிறார்) பக்தர்களுக்கு காட்சி தரும் இந்த திருக்கோயில் சீர்காழியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கே உள்ளது.

கிழக்குமுகமாக நின்ற பெருமாளாக காட்சி தருகிறார் தெய்வநாயகன்.

இக்கோயிலின் தீர்த்தம் சோபன புஷ்கரிணி என்ற பெயரில் உள்ளது. தேவசபா புஷ்கரிணி என்ற பெயரிலும் தீர்த்தம் உள்ளது.

No comments:

Post a Comment