Friday, September 25, 2009

திருச்சிறுபுலியூர்

திருநள்ளாறு கோயில் தரிசனம் முடிந்தபிறகு நாங்கள் அன்றைய யாத்திரையை முடித்துக் கொண்டு கும்பகோணத்துக்கு திரும்பும் வழியில் திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சிறுபுலியூர் என்ற ஸ்தலத்துக்கு வந்தோம்.

அருள்மாக்கடல் மற்றும் க்ருபாசமுத்திரப் பெருமாள் என்ற பெயரில் பெருமாளும் திருமாமகள் அல்லது தயாநாயகி என்ற பெயரில் தாயாரும் தரிசனம் தரும் இத்திருக் கோயிலை நாங்கள் அடையும் போது பொழுது சாய்ந்துவிட்டது.
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் பால சயன நிலையில் உள்ளார்.

No comments:

Post a Comment